"நம்பிக்கையெனும் ஒளிகீற்றை பொருளாதாரத்தின் எல்லா பரப்புகளிலும் நாங்கள் காணத் தொடங்கியுள்ளோம்”, பரக் ஒபாமா.
வாஷிங்டன், 10 ஏப்ரல்: கடந்த வெள்ளியன்று அமெரிக்க அதிபர் பரக் ஒபாமா வெளியிட்ட அறிக்கையில், வீழ்ச்சி அடைந்துள்ள பொருளாதாரம் நம்பிக்கையெனும் ஒளிகீற்றை காட்ட தொடங்கியுள்ளது இருந்தாலும் பொருளாதாரம் இன்னும் மோசமான நிலையிலேதான் உள்ளதாகவும், இதை மீட்டு கொண்டுவர மேலும் பல நடவடிக்கைகள் தேவைபடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
முன்பு பொருளாதாரத்தை பற்றிய தன்னுடைய நம்பிக்கையற்ற பேச்சுகளால் விமர்சனத்திற்க்குள்ளான ஒபாமா தற்பொழுது நம்பிக்கைத்தரும் வாசகங்களை அழுத்தமாக வெளியிட்டுள்ளார்.
”நம்பிக்கையெனும் ஒளிகீற்றை பொருளாதாரத்தின் எல்லா பரப்புகளிலும் நாங்கள் காணத் தொடங்கியுள்ளோம்”, வெள்ளை மாளிகையில் தனது பொருளாதார நிபுணர் குழுவினருடனான ஒரு சந்திப்பில் அமெரிக்க அதிபர் இதை தெரிவித்தார்.
, கருவூளத்துறை செயளர் டிமோதி, பொருளாதார அலோசகர் லாரி ஸமர்ஸ் மற்றும் பெடரல் ரிசர்வ் தலைவர் பென் போறோர் இதில் பங்கேற்றனர்.
ஒரு சில மாதங்களில் இன் நிலை முடிவுக்கு வரும் என்ற ஸமர்ஸின் கூற்றையே பரக் ஒபாமா பிரதிபளித்தார்.
கடன் சந்தைகளின் உருகிவரும் குறிப்பை சுட்டிகாட்டிய அதிபர், வரலாறு காணாத அளவு குறைந்துள்ள வட்டி விகிதமும் மற்றும் வரி குறைப்பும், பணியாட்கள் மற்றும் கடன்களை எதிர்னோக்கியிருக்கும் சிறு வணிக நிறுவனங்களும் மார்ட்கேஜ் ரிஃபைனாஸில் குதிப்பார்கள் என்று அவர் குறினார்.
மேலும் அவர் குறியதாவது, பொருளாதாரம் இன்னும் மோசமான நிலையிலேயே உள்ளது. 25 வருடங்களில் எப்பொழுதும் இல்லாத அலவிறிக்கு வேலைவாய்பின்மை 8.5 சதவிகிதத்தை எட்டியுள்ளது. பலர் தங்களது வீட்டையோ அல்லது வேலையையோ இழந்து வருகின்றனர். அதனால், நாம் செய்ய வேண்டியவை நிறையவே உள்ளது. வணிக் சூழ்நிலை மேலும் மேம்பட வரும் வாரங்களில் எமது நிர்வாகம் பல நடவடிக்கைகள் எடுக்கும்.
கடந்த வெள்ளி கிழமை “குட் ஃப்ரைடே” விடுமுறையானதால், பரக் ஒபாமாவின் இவ்வறிக்கை பங்கு சந்தையில் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருதிருந்துதான் பார்க்க வேண்டும்.